Saturday, February 03, 2018

உஷாரய்யா உஷாரு



உங்களுக்கு தெரிஞ்சே உங்களுக்கு தெரியாம உங்ககிட்ட பணம் பறிக்க முடியுமா?

என்னடா ஆச்சு இவனுக்கு? தூக்க கலக்கத்துல எதையோ தட்டி விட்டிருக்கானான்னு நெனைக்காதீங்க. பதிவ முழசா படிச்சா உங்களுக்கு நான் சொல்ல வர விஷயம் புரியும்.


சூப்பர் மார்க்கெட்ல அடிக்கடி பொருட்கள் வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? அப்படின்னா கொஞ்சம் உஷாரா இருங்க. என்னடா குண்ட தூக்கி போடறானேன்னு பயப்படாதீங்க. கொஞ்சம் கவனமா இருந்தீங்கன்னா உங்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்கலாம்.

super market, shopping, சூப்பர் மார்கெட்
இந்த பொண்ணுங்க மாதிரி பொருளோட வெலய பாத்து வெச்சிக்கோங்க 
சூப்பர் மார்க்கெட்ல எந்த பொருள் எடுத்தாலும் கூடைலியோ தள்ளு-வண்டியிலோ போடறதுக்கு முன்னாடி அதோட விலையை மனசுல குறிச்சி வெச்சிப்பேன். அது என்னோட பழக்கம்.

அதே மாதிரி, பில் போடற கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் நம்மள பார்த்து இருந்தா, அவங்க ஒவ்வொரு பொருள பில்லுல எத்தும்போதும் அதோட விலைய செக் பண்ணிப்பேன். எதாவது தப்பு இருந்தா, உடனே அவங்கள கேப்பேன். ஸ்கரீன பாக்கமுடியலன்னா பில்ல கைல வாங்கினதும் மொத வேலையா பொருட்களோட விலைய சரி பாப்பேன்.


ஒருவாட்டி ஒரு சூப்பர் மார்க்கெட்ல பொருட்களோடு பழங்களும் வாங்கினேன். பல வகை அப்பிள்கள் அங்க இருந்தது. நான் அதுலேர்ந்து எனக்கு வேண்டிய வகை அப்பிளை எடுத்துகிட்டு மறக்காம அதோட விலையை பார்த்து வெச்சிகிட்டேன்.


கவுன்ட்டர்ல பில்ல போட்டு பணத்த கட்டினேன். பில்ல வாங்கி பார்த்தப்பதான் தெரிஞ்சுது நான் வாங்கின அப்பிளோட விலைய போடாம விலை ஜாஸ்தியான வெளிநாட்டு அப்பிளோட விலைய தட்டி பில் போட்டிருக்காங்கன்னு. உடனே அவங்க கிட்ட சொன்னதும் ஓடிப்போய் நான் வாங்கின அப்பிளோட விலைய சரி பார்த்துட்டு வந்து பில்ல மாத்தி போட்டு மீதி காச குடுத்தாங்க. 

இதுபோல ரெண்டு மூணு வாட்டி வேற வேற பொருள்ல நடந்திருக்கு. கேட்டதுக்கப்பறம்தான் தலைய சொறிஞ்சிகிட்டு பில்ல மாத்துவாங்க. சாரி கூட சொல்லமாட்டாங்க. (ஒருவேள பில் போடற பொண்ணுங்க சுரிதார் போட்டிருந்ததாலோ என்னவோ!)

இன்னொருவாட்டி வேற ஒரு சூப்பர் மார்க்கெட்ல ஷு பாலிஷ் வாங்கினேன். அதோட வெல 65 ரூபா. ஆனா பில்லுல பாத்தா 67-னு இருந்துச்சி. என்னடான்னு கேட்டா பதிலே சொல்லாம 2 ரூபாவ திருப்பி குடுத்தான். உன் கம்ப்யூட்டர்ல பொருளோட விலைய மாத்துப்பான்னு சொல்லிட்டு வந்தேன். மாத்தினானோ இல்லையோ தெரியாது.


வேற ஒரு வாட்டி, சூப்பர் மார்க்கெட் மாதிரி நாமளே உள்ள போய் பொருள எடுக்கற ஒரு மளிகை கடைல வாங்கினப்ப நடந்த சம்பவம் இது. அங்க ஒரு எடத்துல பில்ல போட்டு இன்னொரு இடத்துல காசு கொடுக்கணும். பில்ல வாங்கி செக் பண்ணினப்போ, பாதி பில்லா பாக்கறதுக்குள்ள ரெண்டு மூணு வாங்காத பொருள் பில்லுல இருந்தது. கட மொதலாளிய கூப்டு சொன்னேன். அவர் வந்து கூடைல இருந்த பொருள எல்லாம் எடுத்து ஒவ்வொன்னா பில்லோட செக் பண்ணாரு.

அந்தாளுக்கு அதிர்ச்சி. வாங்காத சில பொருளுக்கு பில் போட்டமாதிரி வாங்கின சில பொருளுங்க பில்லுல இல்ல. அதுவும் வெல அதிகமா இருக்கற துவரம் பருப்பு மாதிரியான பொருளுங்க. அப்ப துவரம் பருப்பு கிலோ 2௦௦ ரூபா கிட்ட இருந்தது. அப்பத்தான் தெரிஞ்சுது பில்லு போட்ட ஆளு வேலைக்கு புதுசுன்னு. பொருளோட கோட (code) தப்பு தப்பா தட்டி பில் போட்டிருக்காரு. நான் செக் பண்ணாம விட்டிருந்தா எனக்கு லாபம். ஏன்னா பில்லுல விடுபட்ட பொருளெல்லாம் வெல ஜாஸ்தி. தப்பா பில்லுல சேத்த பொருளெல்லாம் வெல கம்மி. இருந்தாலும் நமக்கு நீதி, நேர்மை, நியாயம் தானே முக்கியம். என்ன நான் சொல்றது சரிதானே?


அதேபோல இன்னொரு விஷயம். சில பொருட்களுக்கு ஏதாவது இலவச இணைப்பு இருக்கும். வாங்கற பொருளுக்கு அப்படி ஏதாவது இருந்தா அதையும் ஞாபகம் வெச்சுப்பேன். பில் போடும்போதே அவங்களுக்கு நியாபகப்படுத்துவேன். இல்லன்ன பல சமயம் அவங்க சைலெண்டா இலவசத்த குடுக்காம விட்டுடறாங்க.


அது கொழந்தைங்களுக்கான பொருளா இருந்து இலவசத்த மறந்துட்டு வீட்டுக்கு போயிட்டோம்னா செத்தோம். மறுபடியும் கடைக்கு ஓடிவந்து அந்த இலவசத்த கேட்டு வாங்கிட்டு போகணும். அந்த ட்ரிப்ல கொழந்தைங்க கண்டிப்பா நம்மகூட வருவாங்க. நேரம் சரியில்லன்னா அங்க அவங்க வேற எதாவது பொருள பாத்துட்டு அதுவும் வேணும்னு அடம் பிடிச்சி பர்சுல இருக்கற மிச்சம் மீதி காசுக்கும் வேட்டு வெச்சிடுவாங்க. .

என்னடா இப்பிடி அல்பதனமா 2 ரூபா 3 ரூபா விஷயத்த பெருசா சொல்றானேன்னு நெனைக்காதீங்க. ஒத்த ரூபாவா இருந்தாலும் ஒழச்சி சம்பாதிச்ச காசாச்சே. எமாத்தரான்னு தெரிஞ்சப்பரம் விட மனசு வருமா? அந்நியன் படத்துல வருமே - 5 பைசா திருடினா தப்பா? 5 தடவ 5 பைசா திருடினா தப்பா? 5 கோடி பேர்கிட்ட 5 தடவ 5 பைசா திருடினா தப்பா?-னு. அந்த வசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன். கேக்கரவங்களுக்குத்தான் அந்த காசு திரும்ப கெடைக்குது. கேக்காதவங்க எத்தன பேரோ?

இதெல்லாம் அவங்க தெரிஞ்சி செய்யறாங்களோ தெரியாம செய்யறாங்களோ, பாதிப்பு என்னவோ நமக்குத்தான். அதனால நாமதான் மக்களே உஷாரா இருக்கணும். உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கும்னு நெனைக்கிறேன். இருந்தாலும் என்னவோ உங்ககிட்ட சொல்லணும் தோணிச்சு. சொலிட்டேன். பாத்து சூதானமா இருந்துகோங்க.

4 comments:

  1. //என்னடா இப்பிடி அல்பதனமா 2 ரூபா 3 ரூபா விஷயத்த பெருசா சொல்றானேன்னு நெனைக்காதீங்க//

    உண்மையில் நான் இப்படி நினைக்கவில்லை நண்பா இதில் வறட்டு கௌரவம் அவசியமில்லை நல்ல பயனுள்ள விடயத்தை எமத்து தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் நன்றி.

      Delete
  2. பல இடங்களில் இப்படித்தான் - கொஞ்சம் அசந்தால் நம்மளையே வித்துடுவாங்க... அதுவும் தில்லியில் கேட்கவே வேணாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் நன்றி.

      Delete