வணக்கம்.
இணைய திண்ணை எனும்
என்னுடைய வலை தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த தளத்தின் மூலமாக
உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்தளத்தில் என் எண்ணங்கள்,
கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
இயந்திரத்தனமாக வாழ்க்கையிலிருந்து
என்னை சற்றே விடுவித்துக்கொள்ளவும், ஆக்கத்திறனை மேம்படுத்திக்கொள்ளவும், மொழி அறிவை
வளர்த்துக்கொள்ளவும் மற்றும் இணையம் வழியாக புதிய நண்பர்களை பெறவும் இந்த வலைதளத்தை
துவக்கியுள்ளேன்.
இணைய திண்ணை என்று
இந்த தளத்திற்கு பெயர் சூட்டக் காரணம் திண்ணை ஒருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும்
உற்றார் உறவினர், நண்பர்கள், வழிப்போக்கர்கள் என எல்லாருக்கும் பயன்படுவதாக இருந்துள்ளது. மக்கள் இளைப்பாறுவதற்கும் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்கும் அது உதவியது. இக்காலத்தில் நம் வீடுகளில் மீண்டும் திண்ணைகளை உருவாக்குதல் என்பது கிட்டத்திட்ட
முடியாத காரியம் ஆகும். அதனால்தான் எல்லாருக்கும் விருப்பமான அந்த திண்ணையை
இணையத்தில் உருவாக்கியுள்ளேன்.
என் பதிவுகளைப்
பற்றிய உங்கள் கருத்துத்துக்கள் அவற்றின் தரத்தை மேம்படுத்த உதவும். அதனால் தவறாமல்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். எதாவது சொற்ப்பிழை ஒற்றுப்பிழை இருந்தால்
தயவுசெய்து தெரிவிக்கவும்
.
விரைவில் அடுத்த
பதிவில் சந்திப்போம்.
நன்றி. வணக்கம்.
படங்கள் கொடுத்து உதவியது கூகுள்.
அருமையாக தங்களது எண்ணங்களின் வெளிப்பாட்டை தொடங்கி விட்டீர்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDelete"திண்ணை" எதிர்கால நம் சந்ததியினர் இதற்கு அர்த்தம் என்ன ? என்று கேட்கும் நிலைப்பாட்டையே தற்போது வைத்து இருக்கிறோம் என்பது உண்மை.
தொடரட்டும் தங்களது உள்ளத்தில் ஒலி வாழ்க வளமுடன்.
திண்ணையில் முதல்வராய் அமர்ந்து கொண்டேன்.
அன்புடன்
கில்லர்ஜி
முதல் நபராக கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
Deleteவலைப்பூ உலகிற்கு வந்திருக்கும் உங்கள் வருகை நல்லதாகவே தொடரட்டும். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. தொடர்ந்து எழுதவேண்டும் என்றே ஆசை. இறைவன் அருளால் அது நடக்கும் என்றே நம்புகிறேன்.
ReplyDeleteதிண்ணையில் அமர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் வளமான தமிழ் வளர்ச்சிக்காக அளவுலாவுதல் நடக்கட்டும்
ReplyDeleteசரவணபவன்,வேலூரிலிருந்து
ReplyDelete