Saturday, February 10, 2018

சிரிக்கலாம் வாங்க - 1

திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே எத்தனை சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், மனக்குமுரல்கள் வந்தாலும் மற்றவர்கள் முன்பு  ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால், பலசமயம் அவர்களின் பேச்சும், எண்ணங்களும், செய்கைகளும் அவர்களையே மனம் விட்டு சிரிக்கவைக்கவும் செய்துவிடும். அப்படிப்பட்ட சில நகைச்சுவை உங்களுக்காக. 

இவை எல்லாம் எனக்கு வாட்ஸப்பில் வந்தவை. உங்களில் சிலர் இவற்றை முன்பே பார்த்திருக்கலாம். இருந்தாலும் இன்னொரு முறை சிரித்ததால் உடல் நலத்திற்கு நல்லதுதானே. 

தமிழாக்கம்: கோவில் சுவற்றில் எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு - உங்கள் மனைவியை கூட்டமான இடங்களில் தனியாக விடாதீர்கள். அவள் தொலைந்துபோனால், கடவுள் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார் என்று நீங்கள் தவறாக நினைதுக்க் கொள்ளலாம்.

இந்த படத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை தானே.

இந்த சிரிப்பை கருத்தாக்கம் செய்தவருக்கு கண்டிப்பாக ஒரு 'ஓ' போடலாம். 

தமிழாக்கம்: ஒரு பெண் சொல்வது எப்போதும் சரி, ஒரு ஆண் சொல்வது எப்போதும் தவறு என்று ஏற்றுக்கொண்டால், பிறகு ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அவள் சொல்வது சரி என்று சொன்னால், அந்த ஆண் சொல்வது சரியா? தவறா?
அட! இது குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசு சொல்ற "பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ......." வசனம் போலவே இருக்கே. 

தமிழாக்கம்
மனைவி - இன்றைக்கு எனக்கு ஓய்வு வேண்டும். அதனால் சினிமாவிற்கு 3 டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.
கணவன் - 3 டிக்கெட் என்? (நாம ரெண்டு பேர் தானே போகப்போறோம் என்று நினைத்துக்கொண்டு)
மனைவி - உங்களுக்கும் உங்க அம்மா அப்பாவிற்கும்.

தமிழாக்கம்: கணவனும் மனைவியும் விவாகரத்து பெற நீதிமன்றம் சென்றனர். நீதிபதி, "உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி பிரித்துக்கொள்வீர்கள்?" என்று கேட்கிறார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் கலந்தாலோசித்த பிறகு மனைவி சொல்கிறாள், "சரி ஐயா, நாங்கள் அடுத்த வருடம் இன்னுமொரு குழந்தையோடு வருகிறோம்" என்று. 9 மாதங்கள் கழித்து அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. விதி யாரை விட்டது?!

No comments:

Post a Comment